இஸ்ரேல்- பாலஸ்தீன் தலைவர்களுடன் ஜோ பைடன் உரையாடல்

0fb1bb5b 260306 550x300 crop
0fb1bb5b 260306 550x300 crop

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு  மற்றும் பாலஸ்தீன் ஜனாதிபதி மஹ்முட் அபாஸ் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், ஜோ பைடனின் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், அதிகரித்துவரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு சர்வதேச சமூகமும் வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் மோதல் நிலை குறித்து ஆராய, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று (16) கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.