தென்னாப்பிரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட நிறவெறி கொடுமைகளை ஒத்த செயற்பாடுகள் காசாவில் இடம்பெற்று வருகின்றமை வருந்தத்தக்கது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலஸ்தீன மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமையையும், தங்களது சொந்த மாநிலத்தில் வாழ நினைப்பதையும் இஸ்ரேல் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இஸ்ரேல் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். மேலும் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.