பாகிஸ்தானில் பஸ் விபத்தில் 13 பேர் பலி! 32 பேர் காயம்!

202105041703196884 Tamil News 15 Dead 35 Injured In Bus Accident In Pakistans Punjab SECVPF
202105041703196884 Tamil News 15 Dead 35 Injured In Bus Accident In Pakistans Punjab SECVPF

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் சுக்கூர் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பயணிகள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, 32 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பஸ் முல்தானில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த வேளையே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.

விபத்துக்குள்ளான பஸ் பாரம் தூக்கியின் மூலம் மீட்கப்பட்டுள்ளது.