கருப்பினத்தவர்களுக்கு எதிரான நவீன அடக்குமுறையின் அடையாளமாக மாறிய ஜோர்ஜ் ப்ளொய்டின் கொலை இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
இதனை முன்னிட்டு அமெரிக்காவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதேநேரத்தில் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ப்ளொய்டின் குடும்பத்தினர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்கள்.
ஜோர்ஜ் ப்ளொய்டி கடந்த ஆண்டு காவல்துறையினரால் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த விடயம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும் எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பில் கடந்த மாதம் டெரெக் சௌவின் என்ற காவல்துறை அதிகாரிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது