ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 13 ஆயிரத்து 784 ஆக உயர்வு!

1595510689 corona outbreak 2 3
1595510689 corona outbreak 2 3

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், புதிதாக 880 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 13 ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 725 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 92.2 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 10 பேர் பலியானார்கள். இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 303 ஆக அதிகரித்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 239 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.