உத்தர பிரதேசத்தில் பேருந்தொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் 17 பேர் பலியாகியுள்ளனர்.
கான்பூர் நகரில் உள்ள சச்சேண்டி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றும், எதிரில்வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 17 பேர் பலியாகியதுடன், மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.