நைஜீரியாவில் ஆயுததாரிகளால் ஆசிரியர்கள், மாணவர்கள் கடத்தல்!

nigeria
nigeria

நைஜீரியாவில் ஆயுததாரிகளால் ஐந்து பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பல மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை.

கடத்தலில் ஈடுபட்ட ஆயுததாரிகளால் இதன்போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மரணித்தார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்கும் பணி தொடர்வதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த கடத்தலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, கடந்த பெப்ரவரி மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அதேநேரம் நைஜீரியாவில் கடந்த சில வருடங்களாக தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.