கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இந்தியாவால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலத்தின் பலாசோர் அருகே உள்ள கலாநிதி ஏபிஜே அப்துல் கலாம் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தொலைதூரத் தொடர்பு நிலையங்கள் மூலம் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து இந்த ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கை அடைந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.