கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யானைகள்!

elephant2
elephant2

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் சிறுவன் ஒருவனை மிதித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் இரண்டு யானைகளை காவல்துறையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

வளர்ப்பு யானை ஒன்று தாக்கியதாலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்த முறைப்பாடுக்கமைய, சிறுவனை தாக்கி கொலை செய்த யானையின் உரிமையாளரை கைதுசெய்த காவல்துறையினர், தாய் யானையையும், யானைக்குட்டியொன்றையும் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

சிறுவனை தாக்கிய யானைகளுக்கும் அதன் உரிமையாளருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த பின்னர் இரண்டு யானைகளும் வனஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.