ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள ஒரு சிறைச்சாலையில் நேற்றைய தினம் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த சிறைச்சாலையில் நேற்று இரு தரப்பு கைதிகளுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் 18 கைதிகள் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் குறித்த இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன் இது குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சிறைச்சாலையில் கடந்த 20 ஆம் திகதி கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 18 பேர் உயிரிழந்தனர், மேலும் 16 பேர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.