500 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து – 24 பேர் பலி

accident
accident

இந்தோனேசியாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர்.

நேற்று இரவு பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 500 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பயணம் செய்த 24 பேர் பலியாகியதுடன் 13 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.