ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தாக்குதல்களில், 24 மணி நேரத்தில் 109 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்புடன் நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, பயங்கரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து தலிபான்களை களையெடுக்கும் முயற்சியாக, இராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 109 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
45 பேர் காயமடைந்துள்ளதாகவும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.