ஹெய்டியில் சக்திவாய்ந்த நில அதிர்வு : 304 பேர் பலி, 1800 க்கும் மேற்பட்டோர் காயம்

800 1
800 1

ஹெய்டியில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நில அதிர்வில் 304 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த நில அதிர்வில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 1800 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹெய்டியின் தென்மேற்குப் பகுதியில் 125 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தலைநகர் போட்டோ பிரின்ஸில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சக்திவாய்ந்த நில அதிர்வானது 7.2 ரிச்டரில் பதிவாகியுள்ளது.

நில அதிர்வால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.

A drone photograph of the damage caused by a 7.2 magnitude earthquake in Les Cayes