மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியுள்ளது.
அரசாங்கத்தில் பங்கு வகித்த பிரதான கட்சியொன்று விலகிச்சென்றதையடுத்து, ஆளுங்கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.
இதன்காரணமாக தான் பதவி விலகுவதாக பிரதமர் முஹைதீன் யாசின், மன்னருக்கு அனுப்பியுள்ள தமது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் இடைக்கால பிரதமராக அவர் கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவலை கட்டுப்படுத்த கையாண்ட விதம் மற்றும் பொருளாதார பின்னடைவு தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் 17 மாதங்களாக பிரதமராக பதவி வகித்துவந்திருந்த முஹைதீன் யாசின்தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.