காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிப் பிரயோகம்!

001 105
001 105

காபூல் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விமான நிலையத்தில், பொதுமக்கள் பாரியளவில் திரண்டுள்ளதால் ஏற்பட்டுள்ள குழப்பநிலையை கட்டுப்படுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும், அந்நாட்டவர்களையும், சர்வதேச பிரஜைகளையும், அதற்கு அனுமதிக்குமாறு தலிபான்களை சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலிய உள்ளிட்ட 60 நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, காபூலில் உள்ள தமது தூதரகத்தின் அனைத்து அதிகாரிகளையும் அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.