அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமுலாக்கப்பட்டுள்ள முடக்கல் நிலை, எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
டெல்டா தொற்றாளர் அலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிட்னி நகரில் உள்ள 5 மில்லியன் குடியிருப்பாளர்கள், கடந்த யூன் மாத இறுதி முதல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அங்கு கடந்த வாரம் தொற்றுப் பரவல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இன்று 642 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நேற்று 681 பேருக்கு தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.