முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் உயிலங்குளம் வேட்டையடைப்பு பிள்ளையார் ஆலயம் இன்றைய தினம் பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரிகளினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழா மற்றும் அன்னதான நிகழ்வின் போது ஆலய தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் கலந்து கொண்டார்கள் என்றும் இதேவேளை அண்மையில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியினால் 12-08-2021 திகதி இடப்பட்டு வெளியிடப்பட்ட வழிபாட்டிடங்களில் கொவிட்-19 சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தல் தொடர்பான அறிவித்தல்களுக்குட்பட்டும் குறித்த ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு ஆலயத்தில் இன்றையதினம் பூஜை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பூசகர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.