150 இந்தியர் தலிபான்களால் தடுத்து வைப்பு!

4ae3c31b 3c81 4c98 afd9 68d872b73b1b
4ae3c31b 3c81 4c98 afd9 68d872b73b1b

இந்திய விமானத்தில் ஏறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த 150 இந்தியர்களை, தலிபான்கள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 140 பேர் மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும், ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காபூலில் 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.