ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும், பிரித்தானியாவும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, காபூல் விமான நிலையத்தைவிட்டு வெளியேறுமாறு, குறித்த இரு நாடுகளும் தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆயிரக்காணக்கான மக்கள் காத்திருக்கின்ற நிலையில், நேற்று இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர், கடந்த 10 நாட்களில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு நாடுகள் முயற்சித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.