இந்தியா முழுவதும், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்திலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது.
இதன்பின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதா சார்பில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
இதேபோன்று மராட்டியத்தின் நாக்பூர் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக லோக் அதிகார் மஞ்ச், பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற அமைப்புகள் பேரணியாக சென்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் ஒஸ்டின், ராலே மற்றும் சியாட்டில் ஆகிய பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் பேரணியாக சென்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.