ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களுக்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டு வரும்தாலிபான் எதிர்ப்பு குழுவினர் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
அதன் தலைவர் அஹமட் மசூத், இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மத குருக்கள் முன்வைத்த யோசனையின் அடிப்படையில், தமது தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.