எதிர்வரும் நாட்களில் தென்கொரியாவுடனான தடைப்பட்ட தகவல்தொடர்பு வழிகளை மீட்பதற்கான தனது விருப்பத்தை வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் வெளிப்படுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்க இரண்டாவது நாளாக புதன்கிழமை கூடிய, நாட்டின் ரப்பர் ஸ்டாம்ப் நாடாளுமன்றின் ஒரு உரையின்போதே கிம் இதனை குறிப்பட்டார்.
இதன்போது அமெரிக்கா தனது “விரோத கொள்கையை” மாற்றாமல் பேச்சுவார்த்தைகளை முன்மொழிவதாக குற்றம் சாட்டினார்.
கிம்மின் இந்த அறிக்கை சியோலுக்கும் (தென்கொரியா) வொஷிங்டனுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்தும் வெளிப்படையான முயற்சியாகும்.
இந்த மாதம் பியோங்யாங் (வடகொரியா) சியோலுடன் ஆறு மாதங்களில் அதன் முதல் ஏவுகணைத் தாக்குதல்களுடன் நிபந்தனையுடன் பேச்சுவார்த்தை நடத்தியது மற்றும் அமெரிக்காவின் விமர்சனத்தையும் இது அதிகரித்தது.
தென்கொரியா-அமெரிக்காவிற்கு எதிராக 2020 ஆகஸ்ட் தொடக்கத்தில் வட கொரியா தகவல் தொடர்புகளை துண்டித்துவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.