ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் ஊடக விவகாரப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்த தாக்குதலில் நான்கு எல்லைப் படையினர் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு வசிரிஸ்தானின் ஸ்பின் வாம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் பாகிஸ்தான் படைகள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் எல்லை முழுவதும் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக தலிபான்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியதால், வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தான் பழங்குடி மாவட்டங்களின் சில பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.