சமாதானத்திற்கான நோபல் பரிசு இரு ஊடகவியலாளருக்கு அறிவிப்பு!

2560
2560

இவ்வாண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு இரண்டு ஊடகவியலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய ரீதியில் பங்களிப்பு செய்கிற சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியல் மற்றும் இலக்கியம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (08) சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்கள் மரியா ரெசா மற்றும் டிமிட்ரி முராட்டோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தை பாதுகாத்ததன் மூலம் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் நிலைநிறுத்தியமைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.