உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த 3 ஒரு தமிழர் உட்பட மூவருக்கு டுபாய் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த மூவரும், தங்களது கையடக்கத் தொலைபேசியூடாக சமூக ஊடகங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய படங்களை பகிர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணை நேற்றைய தினம் டுபாய் நீதிமன்றில் இடம்பெற்றது.
விசாரணைகள் இடம்பெற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த வசதியில்லை என தெரிவிக்கப்பட்டதனையடுத்து மூன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் உறவினரை இழந்த மட்டக்களப்பு இளைஞன் மற்றும் இரண்டு சிங்கள இளைஞர்களுக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.