கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 59 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்க வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனூடாக 375 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் சுங்க வரி திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பொருட்களை கைகப்பற்றும் நடவடிக்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வருடத்தை விடவும் இவ் வருடம் குறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
விமான நிலையத்தில் பொருட்களை சோதனையிடும் கருவிகள் மேலதிகமாக பொருத்தப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.