ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் தொடர்பான எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
தற்போது ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் நிரந்தரமான போர்நிறுத்தத்துக்கான சமரச ஒப்பந்தம் தயாராகியுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தலிபான் அமைப்பினர் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.