நிஸ்ஸான் வாகன நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான கார்லொஸ் கொஸன் லெபனானுக்கு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர் மீதான விசாரணைகள் ஜப்பானில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் லெபனானுக்கு தப்பிச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.