கொவிட்-19 தொற்று மீண்டும் பரவி வருவதால் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க நெதர்லாந்து அரசாங்க முடிவு செய்துள்ளது.
சர்வதேச ஊடகங்களின் தகவலுக்கமைய, உடற்கட்டமைப்பு நிலையங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் போன்ற பொது இடங்களுக்குச் செல்லும்போது, கொரோனா தடுப்பூசியைப் பெற்றதற்கான சான்றளிக்கும் அனுமதி அல்லது கொரோனா சோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதை நெதர்லாந்து அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்தச் சட்டங்கள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.