ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள இராணுவ வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வைத்தியசாலையில், நேற்றைய தினம் துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அதில், தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 50 பேரளவில் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர், ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.