சம்பள முரண்பாட்டை தீருங்கள் என கோரி பெற்றோர்கள் பேரணி!

DSC02179
DSC02179

ஆசிரியர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தரணிக்குளம் பாடசாலைக்கு முன்பாக காலை11.30 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை உடனடியாக தீர்க்குமாறு கோரிக்கை முன்வைத்ததுடன், அவர்களுக்கு ஆதரவான  கோசங்களையும் எழுப்பியிருந்தனர். பாடசாலை முன்பாக ஆரம்பமாகிய குறித்த ஆர்ப்பாட்டம்  தரணிக்குளம் பிரதான வீதி வரை பேரணியாக சென்று அங்கு முற்றுப்பெற்றிருந்தது.