சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!

இந்தியா சீனா 750x375 1
இந்தியா சீனா 750x375 1

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சீனாவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் சாலைகள், பாலங்கள், மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இது இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதற்கும் ஒற்றுமையைக் காப்பதற்குமான நடவடிக்கை என மத்திய அரச விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்த பகுதியில் 100 பேர் கொண்ட கிராமத்தை அமைத்திருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.