தாய்வான் நாட்டின் பொது ஊழியர்களின் தலைவரும், மூத்த இராணுவ அதிகாரியுமான ஷென் யி-மிங் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு தைவானில் ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறங்கிய பின்னர் தாய்வானின் மூத்த இராணுவ அதிகாரியை காணவில்லை என்று நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஜெனரல் ஷென் யி-மிங் உட்பட 13 பேரை மீட்க்கும் பணி நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது,
எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி தாய்வானில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது சந்தேகங்களை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது.