பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
கனேமுல்ல – பொல்ஹேன பொது மயானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் நேற்றுமுன்தினம் நாட்டு கொண்டு வரப்பட்டதுடன், பின்னர் அவரது பூதவுடல் கணேமுல்ல – பொக்குண சந்தி – கந்தலியத்த, பாலுவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது இல்லத்துக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் சென்று நேற்று அஞ்சலி செலுத்தினர்.