இந்தியாவில் மேலும் 5 ஒமிக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்!

omicron
omicron

இந்தியாவில் ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபுடன் புதிய 5 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

சண்டிகார், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஸ்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இவ்வாறு புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆந்திர பிரதேஸ் மற்றும் சண்டிகார் ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரொன் தொற்று கண்டறியப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் டெல்லி, ராஜஸ்தான், மஹாராஸ்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, இந்தியாவில் இதுவரையில் ஒமிக்ரொன் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்வடைந்துள்ளது.