லிபிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்துக்களில் 160 க்கும் மேற்பட்டோர் பலி!

1563955359 ravi 2 3
1563955359 ravi 2 3

கடந்த வாரத்தில் லிபியா கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் 160 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐ.நா குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் அகதிகள் சம்பந்தப்பட்ட மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகரமான சம்பவம் இதுவாகும்.

இந்த இறப்புகளினால் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் இந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்வடைந்துள்ளது.

சமீபத்திய மாதங்களில் திரிபோலியில் அகதிகள் மீதான அடக்குமுறையை அந் நாட்டு அதிகாரிகள் முடுக்கிவிட்டதால், லிபியாவிலிருந்து ஐரோப்பிய நடுகளுக்கு குடியேறும் முயற்சிகள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.