நியுசிலாந்தில் வளிமாசடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்ரேலியாவிலிருந்து சுமார் 2,000 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தின் தென்பகுதியிலேயே இந்தப் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.