தமது இந்தியப் பயணத்தின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு மரியாதை செலுத்திய ஜெர்மன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கே.அச்சிம் ஷ்ன்பாக் பதவி விலகியுள்ளார்.
மேற்கத்திய முகாமில் ரஷ்ய அதிபருக்கு சற்று மரியாதை இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
உக்ரைனை ரஷ்யா இனத்ததையும் அவர் இதன்போது நியாயப்படுத்தினார்.
இந்நிலையில்,ஜேர்மன் கடற்படையின் தளபதி, தனது கடற்படையையும் ஜேர்மன் அரசாங்கத்தையும் இனி சங்கடப்படுத்த முடியாது என்று கூறி பதவி விலகியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியைப் புகழ்ந்தது தவறு என்பதை ஒப்புக் கொண்டதாக அவர் தனது ருவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.