அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீயால் ஏற்படும் பிரச்சனைகளை தொடர்ந்து, பிரதமர் ஸ்கொட் மொரிசன் தனது இந்திய பயணத்தை இரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனவரி 13 முதல் 16ம் திகதி வரை அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் இந்தியாவில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் தீயணைப்பு வீரர்கள் உள்பட 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வனவிலங்குகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாராளுமன்றம் தெரிவித்தது.
அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.