ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு – 14 பேர் பலி

pak blast 163585218816x9 1
pak blast 163585218816x9 1

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்று மாலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் 22 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் உள்ள மசார்-இ-ஷெரீப் நகரத்தில் பேருந்து ஒன்றினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

குறித்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த தாக்குதல்களை இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.