சோமாலியா தாக்குதலில் 30 பேர் பலி!

somali
somali

சோமாலியாவின் லோயர் ஷாபெல்லே பகுதியில் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்ல ப்பட்டுள்ளனர்.

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு பயங்கரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன.

சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.

இதற்காக உள்நாட்டு இராணுவ வீரர்கள், பன்னாட்டு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.