மெக்ஸிக்கோவில் போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதிலிருந்து 60,000 இற்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய தரவுகளின் பிரகாரம் 61,637 பேர் நாட்டில் காணாமற்போயுள்ளனர். இதில் 25 வீதமானோர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
காணாமற்போன சம்பவங்கள் மற்றும் கொலைச் சம்பவங்களுக்கு நாட்டின் பாதுகாப்புத் தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.