2.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள 12 போர் விமானங்களை சிங்கப்பூருக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்த அறிக்கையில்,
“குறுகிய ஓடுபாதையில் புறப்படுவதும், செங்குத்தாக தரையிறங்கக் கூடியதுமான பன்னிரண்டு எஃப் பி-35 போர் விமானங்கள் மற்றும் அவற்றிற்கு தொடர்புடைய உபகரணங்களை சிங்கப்பூர் நாட்டிற்கு விற்பனை செய்ய வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மொத்த மதிப்பு 2.7 பில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 48 கோடி) ஆகும். இதற்கான ஆவணங்களை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் அரசிடம் வழங்கியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.