பாகிஸ்தான் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் – 15 பேர் பலி

explosion
explosion

பாகிஸ்தானில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்றைய நாள் (10) இடம்பெற்ற தாக்குதலில் மேலும் 18 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். குழு பொறுப்பேற்றுள்ளதாக த நியூயோர்க் டைம்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.