மெக்சிகோ நாட்டில் உள்ள போபோகாட்பெட் எரிமலை நேற்று(10) பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் உள்ள நகரங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் உள்ள எரிமலை வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் உள்ள போபோகாட்பெட் எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட கரும் புகை சுமார் 3 கி.மீ தொலைவிற்கு சூழ்ந்தது. இதையடுத்து அந்நகரங்களில் உள்ள மக்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கையான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.