ஓமன் நாட்டு அரசர் சுல்தான் காபூஸ் சயீத் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 79வது வயதில் நேற்றைய நாள் (10) காலமானார்.
அவரது இறப்பை ஓமன் அரசு உறுதி செய்துள்ள அதேநேரம் இறப்பிற்கான காரணத்தினை இதுவரை வெளியிடவில்லை.
மத்திய கிழக்கு நாடுகளில் மிக நீண்டகாலமாக ஆட்சி செய்தவர் சுல்தான். அவரது ஆட்சி காலத்தில் ஓமன் நாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுத்தார். மேலும் அந்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிக் காட்டினார்.
இவரது பிறந்த நாளான நவம்பர் 18ஆம் திகதி ஓமான் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.