மதுரை ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக பிரபாகரன் தேர்வு!

madurai
madurai

மதுரை பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

மாட்டுப்பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

வாடிவாசல் வழியாக 9 சுற்றுகளில் 655 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில், 16 காளைகளை பிடித்த பிரபாகரன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். அவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது.

13 காளைகளை அடக்கிய ராஜா இரண்டாம் இடமும், 10 காளைகளை அடக்கிய கார்த்திக் 3ம் இடமும் பிடித்தார். இருவருக்கும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதேபோல், முதல் பரிசு வென்ற காளை உரிமையாளருக்கு காங்கேயம் பசுவும் கன்றும் பரிசாக அளிக்கப்பட்டது.

இரண்டாம் பரிசு வென்ற காளையின் உரிமையாளர்க்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.