சவுதி எண்ணெய் நிறுவனத்தின் மீது ஈரானிலிருந்து தாக்குதல்- USA தெரிவிப்பு

SAUDHI
SAUDHI

சவுதி அரசுக்குச் சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணை ஏவப்பட்ட இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும், பாரசீக வளைகுடாவின் வடக்கு முனையிலிருந்தே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.

சவுதி அரசு தலைமையில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஈராணுவப் படை ஏமன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஏமன் அரசை எதிர்த்து போரிட்டு வரும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் ஆதரவாக செயற்படுகிறது.

இந்நிலையில் ஏமனில் இருந்து தாக்குதல் நடந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக சவுதியின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தெற்கு திசையை நோக்கி நிலை நிறுத்தப்பட்டிருந்ததால், அவர்களால் இந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்தும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது,