சீனாவில் இருந்து எகிப்து செல்லும் வர்த்தக கப்பலில் பணியாற்றும் 6 இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வர்த்தக கப்பலானது சீனாவில் 11ம் திகதி நிங்போ துறைமுகத்திலும், 13ம் திகதி ஜியாமென் துறைமுகத்திலும் நங்கூரமிடப்பட்டிருந்தது, பின்னர் ஷெகோ துறைமுகத்திலும் குறித்த கப்பல் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த கப்பல் வந்து சென்ற துறைமுகங்கள் வுஹான் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ளன, இது கொரோனா வைரஸின் மையமாக அடையாளம் காணப்பட்டது.
இதனிடையே இன்று காலை இலங்கையின் காலி நகருக்கு அருகாமை வழியாக கடந்து சென்றுள்ள கப்பலானது எதிர்வரும் 30 ஆம் திகதி எகிப்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை.