பிரெக்ஸிட்டிற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல்

brexit
brexit

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முயற்சியால் பிரெக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற ஒப்புதலை பெற்ற பின்னர், பிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் தனது ஒப்புதலை அளித்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முழுவதும் வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் டேவிட் சசோலி கருத்து தெரிவிக்கையில்,

“ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் வாக்களித்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

இனி ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா விலகுவதற்கான இறுதி ஒப்புதலை அளிக்க வேண்டும், அதன் பின்னர் ஜனவரி 31ம் திகதி நள்ளிரவு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறையாக வெளியேறலாம்.

முதல் முறையாக, ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது. இது வருத்தமளிக்கக்கூடியது என்றாலும், ஐரோப்பிய பாராளுமன்றம் பிரித்தானிய மக்களின் விருப்பத்திற்கு எப்போதும் மதிப்பளிக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.